பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனவின் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்குக் கூடத் தெரியாமல் நடைபெற்ற இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல் வெளியே கசிந்தமையை அடுத்து மஹிந்த தரப்புக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அறியவந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மிகமிக நெருங்கிய இரத்த உறவான ஒரு வர்த்தகரின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் இந்தச் சந்திப்பு காதும் காதும் வைத்தால் போல நடந்தேறியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இன்னமும் புலனாய்வுத்துறையுடன் அதீத தொடர்புகளைக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தச் செய்தி அவருக்கே உரிய நம்பகமான வட்டாரங்கள் மூலம் எட்டியருக்கின்றது என்பதும் தெரியவந்துள்ளது.
என்ன விடயம் குறித்துப் பிரதமரும் பஸிலும் பேசினார்கள் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ‘பொது வேட்பாளர்’ சாத்தியம் குறித்துப் பூர்வாங்கப் பேச்சாக இது இருக்குமோ என்ற ஊகமும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் எழுந்துள்ளதாகத் தெரிகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான மூன்று நாள் விஜயத்துக்கு முன்னர் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றது என்பதும் அறியவந்தது.
Recent posts
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்
பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
புதிய பாதையை நோக்கிய கனடா
கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்
தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...




