ஆரோக்கியம் பொது மருத்துவம்

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம்.

❄️ குளிர்காலம் வந்தாலே சளி பிடிக்கும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் சிலருக்கு கால நேரம் தெரியாமல் அடிக்கடி சளி பிடித்துவிடுகிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் சிலர் குழம்பி விடுகிறார்கள். அதுபற்றி உங்களுக்கு உதவும் சில தகவல்களை பார்க்கலாம் வாங்க!

காரணங்கள்:

🦠 தற்போது உடல் சூட்டால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் உடலை பாதுகாக்கும் உரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

☀️ வெயிலின் தாக்கம், நீர்ச்சத்து இழப்பு, சுற்றுப்புற மாசுபாடு போன்ற காரணங்களும் அடங்கும்.

🧹 அழற்சியினால் கூட சிலருக்கு சளி பிடிக்கலாம். அதனால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

😴 சிலருக்கு நல்ல தூக்கம் இல்லை என்றாலும் சளி பிடிக்கலாம். ஏனெனில் நல்ல தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

💡சளியோ, இருமலோ அது எத்தனை நாட்களுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

என்ன செய்யலாம்?

🥤 உங்களுக்கு உடல் சூட்டால் சளி பிடிக்கிறது என்றால் உங்கள் உடலை குளிர்விக்க உதவும் வழிமுறைகளை முதலில் கையாளுங்கள்.

🍉 உடல் சூடு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் முன்கூட்டியே வெள்ளரி, தர்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது. இளநீர், பழச்சாறுகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தலாம்.

🚫 அடிக்கடி ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர் போன்ற குளிர்பானங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

🏠 வெளியில் கிடைக்கும் உணவுகளை தவிர்த்து வீட்டில் தயாரிக்கும் உணவுகளை சாப்பிடுவது உடலை சீராக பாதுகாக்க உதவும்.

🧼 சாப்பிடுவதற்கு முன்போ, கழிவறையை பயன்படுத்திய பின்னோ, வெளியில் சென்று வீட்டிற்கு வந்த பிறகோ, வீட்டு செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகோ கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுவது நல்லது.

💧 சளி, காய்ச்சல் இருக்கும்போது தண்ணீர் நிறைய குடிப்பது நல்ல பலன் கொடுக்கும்.

🤒 சளி பிடித்துவிட்டால், ஐயோ, எனக்கு சளி பிடித்துவிட்டது! என்று வீட்டில் இருக்கும் மருந்து, மாத்திரைகளை எல்லாம் சாப்பிட வேண்டாம்.

💊 இந்த மாதிரியான சாதாரண சளிக்கு எல்லாம் மருந்து தேவையில்லை.

🛡️ நம் உடலே சாதாரண நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

🤧 அந்த எதிர்வினை தான் சளி, இருமலாக வெளிப்படும்.

⏳ பொதுவாக சளி பிடித்தால் ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் சளி தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

💪 ஆரோக்கியமாக இருப்பதும்.. செல்வத்திற்கு ஈடான ஒன்றுதான்.. மறந்துவிடாதீர்கள்..!

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்கள்.

அழகிற்காக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவர். அதற்கு காரணம் கைகளை அழகுபடுத்திக் கொள்ள தான் என்றாலும் உடைக்கு...
Thamil Paarvai

Leave a Comment