இலங்கை உலகம் கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலத்தால் விவாதப்பொருளாக மாறிய விடயத்தால் இலங்கை அரச மட்டத்தில் அச்சம்.

கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவர் விஜய் தணிகாசலம்.

இவர் கடந்த வருடம் ஒன்ராறியோ சட்டசபையில் தமிழின ‘அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான சட்டமூலம் 104இனை கொண்டு வந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

மேற்படி சட்டமூலம் 104 ஆனது, முதலாவது விவாதத்தினை முடித்து இறுதி வாசிப்புக்காக ஒன்ராறியோ சட்டமன்ற மேற்சபையிடம் உள்ளது.

இச்சட்டமூலம் இறுதி வாசிப்பை முடித்து சட்டமாக நிறைவேற்றப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியுடன் கூடிய ஒருவார காலம் ‘தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரமாக’ அதிகாரபூர்வமாக ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படும்.

இதன்மூலம் ஒன்ராறியோவில் உள்ள அனைத்து இன மாணவர்களும் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பு பற்றி அறிந்துகொள்ளவும், அங்கிருந்து தப்பி கனடாவில் வாழும் தமிழர்களும் அவர்களின் தலைமுறையினரும் எதிர்கொண்ட உளவியல் ரீதியிலான தாக்கங்களை உணர்ந்து கொள்ளவும், அவற்றுக்குத் தீர்வினைக் காண்பதற்கும் ஏதுவாக அமையும் என்பது இச்சட்ட மூலத்தின் குறிக்கோள்.

இவ்விடயம்தான் தற்போது இலங்கை அரச மட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள நாடாளுமன்றத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இலங்கை அரசின் முன்னாள் வடமாகாண ஆளுநரும், தற்போது இலங்கை பொதுஜன பெரமுன (மகிந்த ராஜபக்சவின்) கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் மிகவும் காட்டமான உரையொன்றினை கடந்த செவ்வாயன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றியிருந்தார்.

அதில் அவர் கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலத்தையும் , ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றும்போது,

“மேற்படி சட்டமூலமானது நடைமுறைக்கு வருமானால், ஒன்ராறியோவில் உள்ள 4800இற்கும் அதிகமான பாடசாலைகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ‘தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ பாடமாகக் கற்பிக்கப்படும் என்பதுடன், இலங்கை அரசின் திட்டங்களுக்கும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

அத்துடன் எம்.பி.பி. விஜய் தணிகாசலம் அவர்கள் தனது சுய இலாபத்துக்காக அருவருக்கத்தக்க விதத்தில் இலங்கை விடயங்களைக் கையாள்கிறார்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் உடனடியாக இலங்கைக்கும் கனடாவுக்குமான ஒரு நாடாளுமன்ற குழுவினை அமைத்துப் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர்களின் இப்படியான செயற்பாடுகளைத் தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர் கோட்டாபய அரசாங்கம் பதவியேற்றவுடன் நியமன முறையில் எம்.பி.யாக பதவியேற்றதுடன், கடந்த ஆண்டு கனடாவுக்கு வருகை தந்து பல சந்திப்புகளை மேற்கொண்டதுடன், இங்குள்ள தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment