ஒன்ராறியோவில் கொரோனா எண்ணிக்கை திடீர் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்றுமாத்திரம் 3732 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இது 363 பேரால் அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்றைய நிலவரப்படி 1961 தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையி அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 895 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.