கனடா செய்திகள் புதிய செய்திகள்

சவுதி அரேபிய அரசு கனடாவை திட்டமிட்டு பழிவாங்குகிறது – ஆதாரம் வெளியாகியது

மகளிர் உரிமை ஆர்வலர்கள் சவுதி அரேபியாவால் கைது செய்யப்பட்டதை கனடாவின் வெளியுறவு அமைச்சர் கண்டித்ததையடுத்து சவுதி அரேபியா எப்படி கனடாவை பழி வாங்குகிறது என்பதை விவரிக்கும் அரசு ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தகவலறியும் சட்டத்தின் கீழ் பிரபல பத்திரிகை ஒன்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவின் வெளியுறவு அமைச்சரான Chrystia Freeland சவுதி அரேபியா, மகளிர் உரிமை ஆர்வலர்களை கைது செய்ததை கண்டித்து டுவீட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் சவுதிக்கு பல நாடுகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன.

இதனால் ஆத்திரமுற்ற சவுதி அரேபியா, கடந்த ஓகஸ்டில் கனடாவுடனான தனது தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. அத்துடன் கனேடிய தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியதுடன், தனது தூதரையும் சவுதி திரும்ப அழைத்துக் கொண்டது.

அதுமட்டுமன்றி தனது எதிர்கால வர்த்தகம், முதலீட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை முடித்துக் கொண்டதோடு தானிய இறக்குமதியையும் சவுதி நிறுத்தி விட்டது.

மேலும், கனடாவில் படிக்கும் தனது குடிமக்களுக்கான புலமைப் பரிசில்களை நிறுத்தப்போவதாக அறிவித்ததோடு, சவுதி வங்கியும், கனடாவிலுள்ள தனது சொத்துக்களை விற்கத்தொடங்கியது என கனேடிய அரசு அளித்துள்ள அந்த ஆவணத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை சவுதி அரேபிய அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது கனடாவுடன் சவுதி செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களுக்குப் பதிலாக வேறு நாடுகளிடம் ஒப்பந்தம் கேட்டுள்ளது. இராணுவ தளங்களுக்கு அணுகல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கனேடிய மருந்துப் பொருட்கள் நிறுவனம் ஒன்றிற்கு மருந்துகளை இறக்குமதி செய்யவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து கப்பலில் அனுப்பப்பட்ட பல்வேறு பொருட்கள் முழுமையாக சவுதி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இத்தனை நடவடிக்கைகளையும் கனடாவை பழிவாங்கும் வகையில் எடுத்துள்ள சவுதியின் தீவிரத்தை ஒரே மாதத்திற்குள் உணர முடிந்ததாக கனேடியத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment