இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்கு- முதல்வர் இ.ஆனல்ட்

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது என மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக் கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது எனத் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
இது தொடர்பில் மாநகர முதல்வர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. ஏனெனில் அந்த பேரூந்து நிலையச் சூழல் கடந்த காலத்தில் மாநகர சபையின் அதிகாரத்தின் கீழ் இல்லாமல் போனதற்கு இந்த சுதந்திரக் கட்சியினரும் காரணம்.
அன்றிலிருந்து அங்கேயுள்ள பேரூந்து சேவையை விட வியாபார சேவையை நடாத்துவதனால் எழுந்த சர்ச்சையால் அப் பகுதியில் உள்ள கழிப்பறை பராமரிப்பும் பேரூந்து நிலையத்தின் கீழேயே உள்ளது. இவரின் கூற்றுமூலம் ஒன்று தெளிவாகியுள்ளது இவ்வாறான சேவைகளை போக்குவரத்து சபை நடாத்த முடியாது என்பதனை ஒப்புக்கொள்கின்றார்.
இதேபோன்றே இந்த நாட்டில் தமிழர்களை கொன்றொழித்தவர்கள் ஐ.தே.கட்சியே அன்றி சுதந்திரக் கட்சி அல்ல எனவும் கூறியுள்ளார். சந்திரிகா அம்மையாரின் 10 வருட ஆட்சி எந்த அரசின் ஆட்சி மகிந்த ராஜபக்சவின் 11 வருட ஆட்சி எந்தக் கட்சியின் ஆட்சி பண்டாரநாயக்கா சிறீமா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களை தங்கத் தாம்பூலத்திலா வைத்தீர்கள் வகை தொகை இன்றி கொனறொழித்தமையை மறந்து அல்லது மறைத்து பேச முற்படக்கூடாது .
செம்மணி முதல் நவாலி எனத் தொடர்ந்து இறுதி யுத்த காலத்தில் ஒரு லட்சம் பேர் வரையில் கொன்றொழித்தது உங்கள் கட்சி ஐ.தே.கட்சியும் சரி சுதந்திரக் கட்சியும் சரி இரண்டுமே கறை படிந்த கட்சியாகவே உள்ளது. இதில் யார் கூட கொன்றொழித்தீர்கள் என்பதே உங்கள் பிரச்சனை நீங்கள் அவர்களை மோதகம் என்றால் நீங்கள் கொழுக்கட்டை இதுதான் வேறுபாடே அன்றி இரண்டுமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான். அதாவது டட்லி – செல்வா ஒப்பந்தத்தினை கிழித்தமை எந்தக் கட்சி அதற்கு பிரதி உபகாரமாக ஐ.தே.க பண்டா செல்வா ஒப்பந்தத்தை கிழித்தனர்.
எமது சபையின் செயல்பாடுகளை திறம்பட நடாத்த முடியாமல் தற்போது இருப்பதற்கு தங்கள் கட்சியும் ஓர் காரண கர்த்தா. இவ்வாறுள்ள நிலையில் வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. வாயில் வந்தவற்றை உரையாற்ற முடியாது. இவ்வாறான தேசிய வாதக் கட்சிகளின் கூற்றை நம்பிச் செல்லும் எமது கோடாரிக் கம்புகளையும் எண்ணி மனம் நோக வேண்டியுள்ளது. அதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபை எப்போது கூட்டமைப்பின் பிடியில் வரும் என காத்திருந்த எமது புலம்பெயர் உறவுகள் தற்போது அழைத்து நிலமையை உணர்கின்றனர் என்றார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment