தமிழகம் முழுவதும் 61 டிஎஸ்பி.க்களை இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். கோவை நகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக சுந்தரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் வடக்கு சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கிழக்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக அறிவழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.