தமிழீழ விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பளராக விளங்கிய அப்பையா சிறீதரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 7ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இணைந்து கொண்ட யாழ். பல்கலைக் கழக உதவி விரிவுரையாளரான அப்பையா சிறீதரன் (சிறீ) களம் பல கண்ட போராளியாக மட்டுமன்றி ஒரு அரசியல் போராளியாகவும் விளங்கியவர்.
1985ஆம் ஆண்டு யாழ். குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப காலப் பொறுப்பாளராக விளங்கினார்.
பிரபலமான பௌதீகவியல் ஆசிரியராக இருந்து தமிழீழ விடுதலை விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 இல் இணைந்த இவர் ஒரு சிறந்த கல்விமான்.
மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் பல்வேறு தளங்களில் அரும்பணியாற்றியவர். தாயகத்திலும், பிரித்தானியாவிலும் பல்துறை கல்வியாளர்களை அவர் உருவாக்கியுள்ளார்.
பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் பிரித்தானியக் கிளையின் பொறுப்பாளராக செயற்பட்டுவந்தார்.
அத்துடன், தமிழ் அகதிகள் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனமாகிய ரி.ஆர்.ரெக் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் நீண்ட காலம் பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.