2022ஆம் வருடமானது தனுசு ராசி அன்பர்களுக்கு மனதளவில் இருந்துவந்த சில சஞ்சலங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் விவேகமும், தைரியமும் உண்டாகும். அவ்வப்போது செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து புத்துணர்ச்சியை அடைவீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
பொருளாதாரம் :
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் விரயங்கள் அதிகரிக்கும். தற்பெருமை மற்றும் கர்வம் சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நன்மையை உண்டாக்கும். மூத்த உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
பேச்சுக்களில் கனிவும், கண்டிப்பும் அவ்வப்போது வெளிப்படும். வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் மூலமாக சில நேரங்களில் சோர்வும், விரயங்களும் ஏற்படும். உயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோக பணிகளில் எதிர்பாராத உயர்வான சூழ்நிலைகள் காணப்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்பாராத சில நெருக்கடியான சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். திறமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சிறிது நேரத்தை ஒதுக்குவது நல்லது. எதிர்பார்த்த சில பணிகள் முடியும் தருவாயில் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவுபெறும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் ஏற்படும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பல நாள் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் துறை சார்ந்த விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இல்லற வாழ்வில் மனம் மகிழும் படியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
நன்மைகள் :
நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த கவலைகள் நீங்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காலக்கட்டமாக இந்த புத்தாண்டு அமைய உள்ளது.
கவனம் :
எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் பயணம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வழிபாடு :
திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.