1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக யாசர் அரபாத் நியமிக்கப்பட்டார்.

பாலாஸ்தீன முன்னாள் அதிபரான யாசர் அரபாத் எகிப்தில் பிறந்தார். கல்லூரியில் படிக்கின்றபோதே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை கேட்டறிந்து யூத மற்றும் சியோனிஸம் பற்றி நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார். சிவில் பொறியாளர் பட்டம் பெற்ற இவர் 1948-ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபு படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டார்.
1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக நியமிக்கப்பட்டார். 1980-களில் லிபியா-ஈராக்-சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்று, அதைக்கொண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார்.
1990-ல் யாசர் அரபாத் தனது 61-வது வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலாஸ்தீன கிறிஸ்தவ பெண்ணை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வயதில் இறந்துவிட்டார். இவருடைய சாவில் ஏகப்பட்ட மர்மங்கள் நிறைந்திருந்தது.