வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா ஒமந்தை சின்னப்புதுக்குள வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவரில் ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இம்மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டு முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்தோடு மோதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பம் தொடர்பான மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.