கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 22 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்கள். ஆனால், ஒரே ஆறுதலளிக்கும் விடயம் கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்பதுதான்!