உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள்!

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்களில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்தியா, இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளிலிருந்து வந்துள்ள தமிழர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, கணிப்பொறி , தொழில் , கல்விப்பணி என்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் பெருமையுடன் பங்களிக்கிறார்கள். 2016 அமெரிக்க புள்ளியியல் துரையின் கணக்குப்படி அமெரிக்காவில் தமிழ் மொழியை பேசுவோர் எண்ணிக்கையின் அடிப்படையில் 25 ஆவது இடத்தில் உள்ளனர். இந்திய மொழிகளைப் பொறுத்தவரை இந்தி பேசுவோர் சுமார் 8.1 லட்சம் பேர், குஜராத்தி பேசுவோர் 4.1 லட்சம் பேர் , தெலுங்கு 3.7 லட்சம் பேர், பெங்காலி 3.2 லட்சம் பேர், பஞ்சாபி 2.9 லட்சம் பேர், தமிழ் பேசுவோர் 2,7 லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இங்கு தொடர்ந்து வசித்து ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்கள் கிரீன் கார்டு வாங்கியும், கிரீன் கார்டு வாங்கி ஐந்து ஆண்டுகள் கழித்து குடியுரிமை பெற்றும் வசிக்கிறார்கள். இங்கு ஒரு வேலை இருந்தால் வீடு,கார் உள்ளிட்ட அனைத்தும் கடனில் வாங்கமுடியும். அமெரிக்க பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரமாக இருப்பதால் அனைவரும் உழைக்கவேண்டும், கடன் அடைக்கவேண்டும், அனைத்தையும் சந்தை தீர்மானிக்கும் என்ற நிலையில் வாழ்வியல் இருக்கும். இலவசங்களோ, பெரிய உதவிகளோ அரசிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியாது. மீன் கொடுக்கமாட்டார்கள், மீன்பிடிக்க மட்டுமே சொல்லிக்கொடுப்பார்கள்.

தொழில் தொடங்குவது எளிது, வெற்றியும், தோல்வியும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தொழில் சிந்தனை, வியூகத்தை பொருத்து இருக்கும்.

கல்வி: பள்ளிக் கல்வியை அரசே சொல்லிக்கொடுக்கிறது. தனி மனிதர்களுக்கு மதிப்பு அதிகம். தனி மனித கருத்துகளுக்கு மதிப்பு அதிகம். அமெரிக்காவில் தமிழ் மொழியை 300-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளும், பெற்றோர் குழுக்களும் வாரத்திற்கு ஒருநாள் சொல்லிக்கொடுக்கிறார்கள். இதற்கென பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. பெரும்பாலும் மூன்று விதமான அமைப்புகள் தமிழில் பாடநூல்களை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அவரவர்களுக்கு எது விருப்பமோ படிக்கலாம். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தேர்வை எழுதுகிறார்கள்.

அமெரிக்காவின் முதல் மாநிலமாக வெர்சீனியா பொங்கல் பண்டிகைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் முயற்சித்து வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தது ஒரு தமிழ்ச்சங்கம் இருக்கும். இவை பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பாகவும், மத்திய அரசிடம் வரிவிலக்கு பெற்ற அமைப்பாகவும் இருக்கும். தமிழ்ப்பள்ளிகள் பாடத்திட்டத்தை சொல்லிக்கொடுப்பதற்கும் , தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கும், தமிழ் சங்கங்கள் கலை, கலாச்சாரம் , மேடை வாய்ப்புகள், மொழி வளர்ச்சி, மக்களின் நலன் உள்ளிட்டவற்றையும் கவனம் செலுத்துவதிலும் ஈடுபடுகின்றன. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்க்க பெரும்பாலான தமிழ்ச்சங்க மேடைகள் பயன்படுத்தபடுகின்றன.

தாய்நாட்டைவிட்டு , உறவுகளை விட்டு புலம் பெயர்ந்து வசிப்பதால் தாய்மொழிப் பற்றும், ஊர் பற்றும் , நாட்டுப்பற்றும் அதிகம் இருக்கும். பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் கிராமப்புற வளர்ச்சி, ஏழை மாணவர்களின் கல்வி உதவி என்று பல்வேறு உதவிகளை தங்கள் அறிவையும், பொருளாதரத்தையும் கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள்.

அமெரிக்க அரசியல், நிர்வாகம், பன்னாட்டு நிறுவனங்கள், தொழில்கள் என்று பல்வேறு உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இன்று இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தமிழ் மேல் ஒரு ஆழ்ந்த பற்றும், இலக்கியம் , வரலாறு மேல் ஒரு ஈர்ப்பும் இருப்பதை காணமுடியும்.

உலகம் முழுதும் தமிழர்களின் கலை, இலக்கியம், அரசியல், சமூகத் தொண்டு, அரசு நிர்வாகம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் பலரை அழைத்து தங்கள் விழாக்களில் விருந்தினர்களாக சிறப்பித்து விருது வழங்கி பெருமை செய்வார்கள்.

அமெரிக்காவில் ஏராளமான சுற்றுலாத் தளங்கள் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா வரும் பலரும் நியூயார்க், வாசிங்டன் டிசி, புளோரிடா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று பார்க்க விரும்புவார்கள்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட பதிவு பெற்ற தமிழ்ச்சங்கங்கள் இணைந்து சூலை முதல் வாரத்தில் அதாவது சூலை 4-ந் தேதியை ஒட்டி வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (www.fetna.org) ஒருங்கிணைப்பில் பேரவை விழா எடுப்பார்கள். அதற்கு உலக நாடுகள் பலவற்றில் இருந்து தமிழர்கள் கலந்துகொள்வார்கள். இதில் தமிழ் தொழில் முனைவோர் கருத்தரங்கள் மிகவும் பிரபலமானது. இதற்கென அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் அமைப்பு ஒன்றை நிறுவி (www.ateausa.org) நடத்திவருகிறார்கள். தொழில் வாய்ப்புகள், தொழில் தொடர்புகள் உள்ளிட்டவற்றிற்கு மிகவும் பயனுள்ள வகையில் இவற்றை நேர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் பேரவை விழாவில் நடத்துகிறார்கள்.

அமெரிக்கத் தமிழர்கள் இலக்கிய ஆர்வமும், மொழி ஈடுபாடும், தொண்டுள்ளமும் படைத்தவர்கள். உதாரணமாக மருத்துவத்துறையில் இருக்கும் இரு தமிழர்களின் தொடக்க நிதியில் ஹார்வார்டு தமிழ் இருக்கை ஆரம்பித்து இன்று உலக மக்களின் ஒத்துழைப்பிலும், தமிழ்நாட்டு அரசின் உதவியுடனும் சிறப்பாக நடந்தேறியுள்ளது. இது இன்று உலகின் பல தமிழ் இருக்கைகள் தொடங்க அடித்தளமாக அமைந்துள்ளது.

அமெரிக்கத் தமிழர்கள் கணவன்-மனைவி இருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். பொருளாதரத்தில் வளமையாகவும் குழந்தைகளை உயர் நிலை எட்டும் கல்வியை வழங்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டிற்கு விசுவாசமாகவும், அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அதே நேரத்தில் தான் பிறந்த நாட்டிற்கு தேவையான பொருளாதார தொண்டு உதவிகளையும், அறிவுசார் உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment