Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியுள்ள முன்னாள் அமைச்சர்-வடக்கு மக்கள் தொடர்பில்

சீனாவின் ‘சினோபோர்ம்’ கோவிட் தடுப்பூசிகளை வடக்குக்கு வழங்கி அம்மக்களின் மனங்களை வெல்ல ராஜபக்ச அரசு எடுத்துள்ள நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம். அதேபோல் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கி அம்மக்களின் முழு மனதையும் வெல்ல அரசு முன்வரவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கோவிட் தொற்றால் வடக்கு மாகாண மக்களும் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். வடக்கிலுள்ள சகல மக்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட வேண்டும். அதேபோல் ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்.

சீனாவின் தடுப்பூசி விவகாரத்தில் மிகப் பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் உண்மைத்தன்மையை இலங்கை அரசும் சீனத் தூதரகமும் கூட்டாக அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து இரு தரப்பும் தனித்தனியே மறுப்புக் கருத்துக்களைத் தெரிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை.

சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் முன்னணி நாடுகளிடமிருந்து கோவிட் தடுப்பூசிகளை அரசு விரைந்து கொள்வனவு செய்ய வேண்டும்.

நாட்டு மக்களுக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசியை ஏற்றினால் மட்டும் போதாது. இரண்டாவது ‘டோஸ்’ மருந்தையும் உரிய காலத்துக்குள் ஏற்ற வேண்டும். அப்போதுதான் கோவிட் நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும்” – என்றார். 

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment