Featured Uncategorized கனடா செய்திகள் புதிய செய்திகள்

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்.

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய ஒரு கனடிய அரசியல் தலைவருக்கு மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம்

இலங்கை  தமிழர்களுக்கு உரிமை உள்ளது

கொன்சர்வேர்ட்வ் கட்சியின் அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த பிரைன் மல்ரோனி மரணத்தை நாம் “ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய ஒரு கனடிய அரசியல் தலைவரது இறப்பு” என்று குறிப்பிடுகின்றோம்.

பிரையன் மல்ரோனி அவர்கள் 1984 முதல் 1993 வரை கனேடியப் பிரதமராகப் பணியாற்றினார், அவரது பணிக்காலத்தில் கனடாவின் கரையொன்றில் சட்டவிரோதமாக கப்பல் ஒன்றில் வந்திற ங்கினார்கள், நூற்றுக்கணக்கான எமது ஈழத்தமிழர்கள்.

அவர்களை அகதிக் கோரிக்கையாளர்களாக கனடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதா அன்றி அவர்களை ‘வந்த வழியே ‘ திருப்பி அனுப்புவதா? என்ற விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் “அவர்களை திருப்பி அனுப்புங்கள்’ என்று முழங்கினார். சக உறுப்பினர்களும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.

ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களுக்கும் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை அகதிக் கோரிக்கையாளர்களாக கனடிய அரசாங்கம் ஏற்றுககொள்ளக்கூடாது என்று ரகசியமாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் பிரதமர் மல்ரோனி அவர்கள் எழுந்து நின்று அமைதியாகச் சொன்னார்,

“கனடாவில் வாழும் மக்களில் பெருந்தொகையானவர்கள் இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்களே! எனவே நேற்று வந்த இவர்களுக்கும் அகதிக்கோரிக்கையை சமர்ப்பிக்க உரிமை உள்ளது. எனவே எமது அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கட்டும் .அவர்களை நாம் விசாரிப்போம். பின்னர் தீர்மானிப்போம்” என்றார்.

இந்த அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

Recent posts

0x1c8c5b6a

0x1c8c5b6a
admin

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

Leave a Comment