Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

அவசர நிலை பிரகடனம் கனேடிய மாகாணம் முழுமைக்கும் : காட்டுத்தீ பாதிப்பின் பிரதிபலிப்பு

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, மாகாணம் முழுமைக்கும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை வெளியேற்றப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் எப்போது வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலைமையும் உருவாகியுள்ளது.

தொடர்ந்து உள்ளூர் அலுவலர்கள் அவசர நிலை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு பெருமளவில் மக்களை விரைவாக வெளியேற்றுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், தேவையானால், அவர்களுக்கு தங்கும் இடம் முதலான ஏற்பாடுகளை அரசு செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் Mike Farnworth தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுவதும் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் பல இடங்களில் வாழும் மக்களுக்கு வெளியேற ஆயத்தமாக இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர நிலை 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும், தேவையானால் அது நீட்டிக்கப்படக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment