சிறுகதை சிறுவர் பக்கம்

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று பரிசளிக்க விரும்பினாள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவள் செய்து முடித்தாள். கிறிஸ்துமஸ் நாள் வந்தது.

அன்று அதிகாலை, அவளது தந்தை தூக்கத்திலிருந்து விழிக்க காத்திருந்தாள். தந்தை எழுந்ததும் ‘அப்பா இது உங்களுக்காக நான் கொடுக்கும் பரிசு” என்று ஒரு பெட்டியை கொடுத்தாள். அது தங்க காகிதத்தால் மூடப்பட்டிருந்தது. அதை பார்த்ததும், கோபம் கொண்டு உனக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று கத்தினான்.

நான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணம் என்று பதிலளித்தாள். இருப்பினும், கோவத்துடன் உள்ளே என்ன உள்ளது என்று திறந்துப் பார்த்தான். ஆனால் உள்ளே ஒன்றும் இல்லாததைக் கண்டு ஆத்திரம் கொண்டு அந்த சிறுமியை அடிக்கத் தொடங்கினான்.

அந்த சிறுமி வலி தாங்காமல் ‘அப்பா என்னை அடிக்காதீர்கள், அதில் நான் உங்களுக்காக நிறைய முத்தங்களை நிரப்பியுள்ளேன்” என்று கூறினாள். இதைக்கேட்ட அவன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, மகளை கட்டி அணைத்துக் கொண்டான்.

நீதி : அன்பை விட முக்கியமானது எதுவுமில்லை. உங்களை நேசிப்பவர்கள் மீது மரியாதையும், அன்பும் செலுத்துங்கள்.

Gift from daughter..!

A poor man named ram lived with his family. He had one wife and one daughter. The daughter wanted to gift her father on Christmas Day. She has done all the work. The day of Christmas came.

That Early morning, she was waiting for her father to wake up from sleep. When her father woke up, She gave a box and said, “Dad, this is my gift for you.” It was covered with gold paper. Upon seeing it, he got angry and shouted how you got so much money.

She replied that I had saved some money little by little. However, opened up with angry what was inside. But when he saw that there was nothing inside, he became resentment and began to beat the little girl.

That little girl said in pain, “Don′t hit me, Dad. I′ve filled a lot of kisses for you.” Upon hearing this, he politely apologized and hugged his daughter.

Moral : There is nothing important than love. Give respect and care on those who are loving you.

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

இவருக்கு இருந்தாலும் இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது.

ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர்...
Thamil Paarvai

Leave a Comment