பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரம். தை மாதத்தின் கடைசி வாரத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மகர ராசியில் சூரியன், குரு, சனி, சுக்கிரன்,புதன், மேஷ ராசியில் செவ்வாய், ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் விருச்சிகம், தனுசு, மகர ராசிகளில் சஞ்சரிக்கிறார். மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணிகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பிப்ரவரி 05, 2021 முதல் பிப்ரவரி 11, 2021 வரை பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் .

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் ராசியில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் கேது,பத்தாம் வீட்டில் சுக்கிரன் சூரியன், சனி, குரு, புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
பிப்ரவரி 05,2021 பிற்பகல் 12.47 மணி முதல் பிப்ரவரி 07,2021 பிற்பகல் 04.14 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். வார முற்பகுதியில் பத்தாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. மாத இறுதியில் தொழில் ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் கூடி உங்களின் சுக ஸ்தானத்தை பார்வையிடுகின்றன. தாய் வழி சொத்து மூலம் லாபம் கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கலாம். சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் குதூகலமாக இருக்கும். வியாபாரம் தொழிலில் லாபம் வரும். வருமானம் பல மடங்காக உயரும். வேலை விசயமாக நல்ல தகவல்கள் வரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு இது நம்பிக்கை தரக்கூடிய வாரம். கேந்திர ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். கஷ்டங்கள் நீங்கி கல்யாண யோகம் கை கூடி வரும் திடீர் திருமண யோகம். புது வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். வெளியூரில் இருந்து வேலை விசயமாக நல்ல செய்தி தேடி வரும். தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட நன்மைகள் நடைபெறும். எளியவர்களுக்கு அன்னதானம் கொடுக்கலாம்.
ருண விமோசன பிரதோஷம் வருகிறது செவ்வாய்கிழமை நரசிம்மரை வழிபடலாம்.
ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசியில் ராகு, ஏழாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஒன்பதாம் வீட்டில் சூரியன், சனி, குரு,சுக்கிரன், புதன் 12ஆம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
பிப்ரவரி 07,2021 பிற்பகல் 04.14 மணி முதல் பிப்ரவரி 09,2021 இரவு 08.30 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். மாற்றங்கள் நிறைந்த வாரமாக அமைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். நினைத்த காரியம் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குருபார்வை நன்மை தரக்கூடியதாக இருக்கும் வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தலைமைப் பண்பு அதிகரிக்கும். அரசியல் யோகம் வெற்றிகளை தேடி தரும். பெண்கள் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை வேலையில் வெற்றிகள் கிடைக்கும். திருமண யோகம் கை கூடி வரும். நல்ல தகவல் தேடி வரும். சந்திராஷ்டமம் முடிந்து புதிய தொழில் தொடங்கலாம்.
தை அமாவாசை நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்கு 12ஆம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சூரியன், சனி, குரு, சுக்கிரன்,புதன்,லாப வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
பிப்ரவரி 09,2021 இரவு 08.30 மணி முதல் பிப்ரவரி 12, 2021 அதிகாலை 02.10 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். உங்க ராசிநாதன் புதன் வக்ரமடைந்துள்ளார். குடும்பத்தில் பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை செய்யும் இடத்தில் அமைதியும் நிதானமும் அவசியம். சுக்கிரன் இடமாற்றத்தால் நல்லது நடக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் முதலீடுகளில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்திப்போடுங்கள் தடைகள் அதிகம் வரும். வியாபாரத்தில் விழிப்புணர்வு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சில சிக்கல்கள் வரும். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகம் வரும் கவனம் தேவை. சொத்து தகராறு வரும் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை விசயங்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம் தடைகள் வரலாம், உடல் ஆரோக்கியம் தொடர்பாக செலவுகள் வரலாம். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து விரட்டுங்கள். நேர்மறை எண்ணங்களை அதிகம் மனதில் நினைத்தாலே வெற்றி கிடைக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் சேர்ந்துள்ளதால் இறைவழிபாடு அவசியம்.
அன்னதானம் செய்யுங்கள் தை அமாவாசை நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.
கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சூரியன், சனி, குரு, சுக்கிரன்,புதன், பத்தாம் ஆம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமான நிலையில் சஞ்சரிக்கிறார். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதி சந்தோஷம் ஏற்படும். உடல் நடத்தில் கவனம் தேவை. வெளியிடங்களில் பேசும் போது கவனமும் விழிப்புணர்வும் அவசியம். வியாபாரத்தில் வளர்ச்சி கிடைக்கும். அரசியல் ஈடுபாடு செய்பவர்களுக்கு நிதானம் தேவை. பெண்களுக்கு கணவரிடம் இருந்த பிரச்சினை நீங்கும். கணவரிடம் இருந்து பரிசு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். இளைஞர்களுக்கு கல்யாண யோகம் கை கூடி வந்துள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபமும் வளர்ச்சியும் அதிகரிக்கும். தை அமாவாசை நாளில் ஆறு கிரகங்கள் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து சம சப்தமாக உங்கள் ராசியை பார்வையிடுகின்றனர்.சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள்.
செவ்வாய்கிழமை ருண விமோசன பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு அபிஷேகத்தில் பால் வாங்கி கொடுக்கலாம்.
சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் கேது, ஆறாம் சூரியன், சனி, குரு, சுக்கிரன்,புதன், ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. ஆறாம் வீடான ருண ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் கூடி வருவது மனதில் நிம்மதியை கொடுக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வெளியாட்களிடம் பேசும் போது கவனமும் விழிப்புணர்வும் அவசியம். பணம் கடன் வாங்கும் போது யோசித்து வாங்குங்கள். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாக ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசித்து செய்யவும். புதிய வேலை தொடர்பாக தை அமாவாசை முடிந்து வளர்பிறையில் முயற்சி செய்யவும். இந்த வாரம் இருக்கிற வேலையில் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திடீர் வருமானம் வரும். அதற்கேற்ப செலவுகளும் வரும் சுப செலவுகளாக மாற்றுங்கள். சனிக்கிழமை மூன்றாம் பிறை தரிசனம் அவசியம் செய்யவும். அரசியல் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும் கூட இருப்பவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
அமாவாசை நாளில் மறக்காமல் குல தெய்வத்தை நினைத்து வணங்கவும்.
கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சூரியன், சனியுடன் குரு, சுக்கிரன், புதன், எட்டாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
பலம் வாய்ந்த சனியின் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. சனிபகவான் வீடான ஐந்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் சஞ்சரிப்பதால் மன குழப்பம் நீங்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த விசயங்கள் கைகூடி வரும். எட்டாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். எட்டுக்குடையவன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் நிதானம் தேவை.கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமான இருக்கவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தாலே மன குழப்பம் இன்றி தப்பிக்கலாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் பதவியில் மாற்றம் வரும். ராசி நாதன் புதன் வக்ரமடைவதால் கவனமும் நிதானமும் தேவை. பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் வரும். வெளிநாடு முயற்சிகளை தவிர்த்து விடவும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. வேலைகளில் பிரச்சினைகள் வரலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பாதிப்புகள் நீங்கி பலன்கள் அதிகரிக்க ருண விமோசன நாளில் யோக நரசிம்மரை விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சுக்கிரன்,சூரியன், சனி, குரு, புதன், ஏழாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
இந்த வாரம் முற்பகுதியில் ராசிக்கு நான்காம் இடத்தில் 5 கிரகங்கள் இணைந்துள்ளன. அர்த்தாஷ்டம சனி உங்களுக்கு நிறைய தடைகளை ஏற்படுத்துகிறது. வார இறுதியின் 3 நாட்கள் ஆறு கோள்கள் ஐந்தாம் வீட்டில் ஒன்றாக இணைகின்றன. சனியின் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவது உங்களின் பலத்தை அதிகரிக்கும். ராசிக்கு 10ஆம் வீட்டின் மீது கிரகங்களின் பார்வை விழுகிறது. நல்ல விசயங்கள் நிறைய நடைபெறும். புது வேலை கிடைக்கும். வேலை தொழிலில் மேன்மை கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். தொழிலை மேன்மைப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள். செவ்வாயின் பார்வை ஏழாம் வீட்டில் இருந்து உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷத்தை அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பயம் நீங்கும். பணம் எவ்வளவு வந்தாலும் செலவாகிறதே என்று யோசிக்கிறீர்களா? பணத்தை நீங்கள் கவனமாக சேமித்து வைக்கவும். நீண்ட காலமாக இடம், வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம். இடம் வாங்கலாம். பெண்கள், இல்லத்தரசிகள் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சுப செய்தி தேடி வரும். திருமண வரன் அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமண சுப காரிய முயற்சி செய்யலாம். ராகு கேதுவினால் சில தடைகள் ஏற்பட்டாலும் அதையும் மீறி கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
வியாழக்கிழமை குரு பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் கேது, மூன்றாம் வீட்டில் சூரியன், குரு, சனி,சுக்கிரன், புதன், ஆறாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
இந்த வாரம் மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. கிரகச்சேர்க்கை திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும். பலவீனங்கள் நீங்கி பலம் அதிகரிக்கும். பல நன்மைகளை கொடுக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். அரசு தொடர்பான வேலைக்கு முயற்சி செய்யலாம். கூட்டுத் தொழில் லாபத்தை கொடுக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்ய கடன் கிடைக்கும், நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த விசயங்களில் நன்மைகள் நடைபெறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் மங்கல காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். வேலைமாறுதல், புரமோசன் கிடைக்கும். இளம் வயதினருக்கு திடீர் திருமண யோகம் வரும். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும்
செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் சொல்லவும் முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கேது,இரண்டாம் வீட்டில் சூரியன், குரு, சனி, சுக்கிரன், புதன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
இரண்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளன. தன லாபம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.கடன் பிரச்சினை நீங்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். சவால்கள் அதிகரிக்கும். பண பிரச்சினை நீங்கும். சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சுகங்கள் அதிகரிக்கும். உங்களுடைய மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் வந்து விட்டது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணையும் காலத்தில் யோகம் தேடி வரும். வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சுப செய்திகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். திருமண வயதில் காத்திருப்பவர்களுக்கு திடீர் திருமண யோகம் தேடி வரும். வாக்கு ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியிருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். ஆறாம் வீட்டில் ராகு, 12ஆம் வீட்டில் கேது கிரகங்கள் சஞ்சரித்தாலும் பிரச்சினை இல்லை. போராட்டங்கள் நீங்கும். வேலையில் இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைக்கும்.
சனிக்கிழமை அனுமனை வெற்றிலை மாலை சாற்றி வணங்க வெற்றிகள் தேடி வரும்.
மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, ராசியில் சூரியன், குரு, சனி, சுக்கிரன், புதன், நான்காம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
உங்கள் ராசிநாதன் சனியின் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வேலைக்காக இப்போது முயற்சி செய்ய வேண்டாம். நிறைய தடைகள் வரலாம் ஜென்ம ராசியில் சனியின் வீட்டில் கிரகங்கள் இணைந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வார இறுதியில் சந்திரன் உங்கள் ராசிக்கு வருகிறார். முதல் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் திருமணம் சுப காரிய முயற்சிகளை தொடங்கலாம். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் நீங்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் உண்டு. புத்திர பாக்கியம் கிடைக்கும். உங்கள் ராசியில் ஆறுகிரகங்கள் இணைவதால் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். வீட்டில் மங்கல காரியங்கள் நடைபெறும். புதிய பொருள் கை வந்து சேரும். திருமண சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். கூட்டுதொழில் லாபத்தை கொடுக்கும். தை அமாவாசை நாளில் காளி தேவியை விளக்கேற்றி வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.
கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே இந்த வாரம் பத்தாம் வீட்டில் கேது விரைய ஸ்தானத்தில் சூரியன், குரு, சனி சுக்கிரன்,புதன், இரண்டாம் வீட்டில் புதன், மூன்றாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாயின் சஞ்சாரம் தைரியம், தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் உதவி அதிகரிக்கும். செலவுகள் அதிகம் நடைபெறும். சுப செலவுகளாக மாற்றுங்கள். வருமானம் அதிகம் வந்தாலும் அது வீண் செலவாக போகிறதே என்று கவலைப்பட வேண்டாம் இதுவும் கடந்து போகும். பூர்வ புண்ணியாதிபதி புதன் வக்ரமடைவதால் செய்யும் தொழிலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு விசயத்திலும் கவனம் தேவை. சனிபகவானின் சஞ்சாரம் செயலில் நிதானத்தை கொடுக்கும். இது விபரீத ராஜயோக காலமாகும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வார பிற்பகுதியில் ஆறு கிரகங்கள் கூடியுள்ளன. சுப விரைய செலவுகள் அதிகமாகும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். குருவின் பார்வையால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
ஞாயிறுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவரை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சூரியன், குரு, சனி, சுக்கிரன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
தொட்ட காரியம் துலங்கும். வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியம் நடைபெறும். பிள்ளைகள் மூலம் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வண்டி வாகன யோகம் வரும். வெளியூர் பயணங்களால் நன்மையை கொடுக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கடன் பிரச்சினைகள் நீங்கும். லாப ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணைவதால் அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். உழைப்பிற்கேற்ற வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். மனதில் இருந்த மிக முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். வார இறுதியில் சந்திரன், லாப ஸ்தானத்தில் உள்ள ஐந்து கிரகங்களுடன் இணைகிறார். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் வெற்றிகரமாக முடியும். ராகுவின் சஞ்சாரம் சகோதர சகோதரிகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் லாபம் கிடைக்கும். சந்தோஷமும் லாபமும் நிறைந்த வாரம்.
குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.