பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனவின் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்குக் கூடத் தெரியாமல் நடைபெற்ற இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல் வெளியே கசிந்தமையை அடுத்து மஹிந்த தரப்புக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அறியவந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மிகமிக நெருங்கிய இரத்த உறவான ஒரு வர்த்தகரின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் இந்தச் சந்திப்பு காதும் காதும் வைத்தால் போல நடந்தேறியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இன்னமும் புலனாய்வுத்துறையுடன் அதீத தொடர்புகளைக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தச் செய்தி அவருக்கே உரிய நம்பகமான வட்டாரங்கள் மூலம் எட்டியருக்கின்றது என்பதும் தெரியவந்துள்ளது.
என்ன விடயம் குறித்துப் பிரதமரும் பஸிலும் பேசினார்கள் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ‘பொது வேட்பாளர்’ சாத்தியம் குறித்துப் பூர்வாங்கப் பேச்சாக இது இருக்குமோ என்ற ஊகமும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் எழுந்துள்ளதாகத் தெரிகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான மூன்று நாள் விஜயத்துக்கு முன்னர் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றது என்பதும் அறியவந்தது.
Recent posts
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.
கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.
“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி
கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்
அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...




