கிரிக்கெட் விளையாட்டு

இரு அணியின் கேப்டன்கள் அடுக்கும் காரணங்கள்: டி20ல் கடைசி பந்தில் ஜஸ்ட் மிஸ்சான இந்தியா இதுதான் வெற்றிகரமான தோல்வியா?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. ‘இதுதான் வெற்றிகரமான தோல்வி’ என்று அரசியல்வாதிகள் கூறுவது போல் இந்திய ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஇ 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

வருகிற மே மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவென்பதால், இந்த சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில்இ இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

அந்த அணி 5 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த மேக்ஸ்வெல் தொடக்க வீரர் ஆர்கி ஷாட்டுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் சேர்ந்து 84 ரன்கள் குவித்தனர். ஆர்கி ஷார் 37 ரன்களில் வெளியேற மேக்ஸ்வெல் அரைசதம் கடந்தார்.

15 ஓவர்களுக்கு ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து திணறிய போது ஆட்டம் பரப்பரப்பான கட்டத்தை எட்டியது.

பின்னர் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

கடைசியாக ஒரு பந்துக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அதில் 2 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா வென்றது. மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நைல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 127 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. ஆனால் இந்திய ரசிகர்கள் ‘இதுதான் வெற்றிகரமான தோல்வி’ என்று அரசியல்வாதிகள் கூறுவது போல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறுைகயில் ‘‘ஆஸ்திரேலிய அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. 150 பிளஸ் ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.

பந்துவீச்சில் பும்ராஹ் மிக அபாரமாக செயல்பட்டார்; அதே போல் மாயன்க் மார்கண்டேவும் மிடில் ஓவர்களின் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இருந்த போதிலும் ஆஸ்திரேலிய அணி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்றுவிட்டது’’ என்றார்.

இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில்‘‘இலக்கு மிக குறைந்தது என்பதால் இலகுவாக வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்தோம் ஆனால் பும்ராஹ் போட்டியை அப்படியே மாற்றிவிட்டார். இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி.

பந்துவீச்சில் நாதன் கவுட்டர் நைல் மிக சிறப்பாக செயல்பட்டார் அதே போல் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடிவிட்டார்.

நைல் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

Recent posts

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

Leave a Comment