Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

வெப்பமண்டல புயலால் அதிகரித்த கனமழை, சமீபத்திய நாட்களில் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளை மூழ்கடித்து, ஆயிரக்கணக்கான மக்களை முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், குடியிருப்பும் உற்றார் உறவினர்களை இழந்து தவிக்கும் மோசமான நிலைக்கும் உள்ளாகினர்.

இலங்கையில் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இறப்பு எண்ணிக்கை 334 என அதிகரித்துள்ளதாக ஞாயிறன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் காணாமல் போனவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான சுனாமிக்குப் பிறகு இலங்கையைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவென்றே கூறுகின்றனர்.

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச ஆதரவுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாக உறுதியளித்தார்.

இதனிடையே, இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் கடுமையாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளை அடைய அதிகாரிகள் திணறிவரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை ​​442 கடந்துள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

அத்துடன் 402 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமத்ரா தீவின் குறைந்தது இரண்டு பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை வரை நெருங்க முடியவில்லை என்றும், உதவிகளை வழங்க ஜகார்த்தாவிலிருந்து இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை மற்றும் கனரக உபகரணங்கள் இல்லாததும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக அமைந்தது. தாய்லாந்தில், ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் குறைந்தது 162 பேர் மரணமடைந்துள்ளனர், அதிகாரிகள் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதுடன், பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும் அகற்றி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தலைநகரில், சக்திவாய்ந்த சூறாவளியை அடுத்து மண்சரிவுகள் ஏற்பட்டதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 148,000 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

Leave a Comment