ஆரோக்கியம் பொது மருத்துவம்

உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி?

மழைக்காலம்… இந்தக் காலங்களில் குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியோர்கள் என அனைத்து தரப்பினரையும் நோய் ஒருபாடு படுத்திவிடும்.

சளியில் ஆரம்பிக்கும் சின்னஞ்சிறு நோயானது, கவனமின்மையாலும் அலட்சியத்தாலும் இறுதியில் அதிகப்படியான காய்ச்சலுக்கு வித்திட்டு விடும் அபாயம் இருக்கிறது.

ஆகையால் கொஞ்சம் சமயோஜித புத்தியுடன் இந்த மழைக்காலத்தை நாம் கையாள வேண்டி இருக்கிறது. அவை பற்றி இங்கு காண்போம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் :

குழந்தைகளுக்கு சளியோ அல்லது இருமலோ ஏற்படுமாயின், சுடு தண்ணீர் கொடுப்பதில் தொடங்கி அதிக நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை கொடுப்பது என படிப்படியாகத்தான் மருந்துகளை அணுக வேண்டும்.

மிகச் சிறிய குழந்தைகளாய் இருப்பின், தாய்ப்பாலுடன் உறை மாத்திரையை கலந்து கொடுக்கலாம்.

 சிறுவர் சிறுமியராக இருப்பின் அவர்களுக்கு உணவில் தூதுவளைச் சட்னி, கற்பூரவல்லி சட்னி, கொள்ளு சுண்டல், கொள்ளு சட்னி, கொள்ளு ரசம் உள்ளிட்ட உணவுகளை கொடுக்கலாம்.

இது தவிர்த்து அதிகமான கீரைகள் மற்றும் காய்கறிகளை பகல் உணவின்போது எடுத்துக்கொள்ளலாம்.

முதியோர்கள் மற்றும் நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக்கொள்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக்கொள்வோர் சித்த மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் சில மருந்துகளை எடுத்துக்கொண்டு உடலை பராமரித்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல், இருமல் பிரச்னை உள்ளவர்கள் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல் நலம்.

குறிப்பாக இரவில் கீரை சாப்பிடுவது, குளிர்ச்சியான காற்றில் அதிக நேரம் இருப்பது முதலியவற்றைத் தவிர்க்கலாம். குளிர் நீரில் குளிப்பதைத் தவிர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும்.

கூடுமானவரை குளிர்சாதன அறையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இந்தக் காலங்களில் முதியோர்கள் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நடுத்தர வயதினர் கவனத்தில் கொள்ள வேண்டிவை :

துரிதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இரவு நேர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது சாப்பிடும் உணவுடன் இணைத்து ஐஸ்கீரிமை எடுத்துக்கொள்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

கூடுமானவரை இரவு நேரங்களில் அதிகமான உணவை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதுடன், சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்வது மிக முக்கியமானது.

வாரத்திற்கு இரு முறை ஆவிப்பிடிக்கலாம். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் மஞ்சள், மிளகு மற்றும் பால் கலந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்த்து, உடலுக்கு வெப்பம் கொடுக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மதிய வேளையில் மோர் குடிக்கலாம். மனநல ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மோர் முக்கியப்பங்கு வகிக்கும்.

Recent posts

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

அவல் பால் கொழுக்கட்டை

அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- அவல்...
Thamil Paarvai

சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள்

மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது...
Thamil Paarvai

இந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம் !!

இன்று பலரும் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்வதற்காக பலவகை அழகுச்சாதனப் பொருட்களை தேடி வாங்குகிறார்கள். இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். 👧 செயற்கையான அழகுச்சாதனப்...
Thamil Paarvai

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள் !!

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள்....
Thamil Paarvai

Leave a Comment