யார் எதிர்த்தாலும் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு என்ன செய்தார்கள் என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்காலத்தில் மரண தண்டனை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று தெரித்த ஜனாதிபதி, ஆனால், அது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதை கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.