காலச் சுவடுகள்

எரிநட்சத்திர ஊர்வலம்

பிப்ரவரி 9 1913ஆம் ஆண்டு இதே நாளில்தான் பெரும் எரிநட்சத்திர ஊர்வலம் என்று குறிப்பிடப்படும் நிகழ்வு ஏற்பட்டது.

வழக்கமாக, எரிநட்சத்திரம் என்று நாம் குறிப்பிடுபவை, கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மைக் கடந்து சென்று மறைந்துவிடும். ஆனால், இந்நிகழ்வின்போது, ஒவ்வொரு எரிநட்சத்திரமும் 30 முதல் 40 நொடிகளுக்குத் தெரியுமளவுக்கு நிதானமாகக் கடந்து சென்றது.

இவ்வாறான 40இலிருந்து 60 வரையான எரிகோளங்கள் வானின் இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசிக்குக் கடந்து சென்றன. இவ்வாறு எரிநட்சத்திரங்கள் கடந்துசெல்வது கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்கு நீடித்தது.

கனடாவின் பல பகுதிகள், அமெரிக்காவின் வடகிழக்குப்பகுதி, பெர்முடா ஆகியவற்றிலும், கடலிலிருந்த பல கப்பல்கள் என்று சுமார் 11 ஆயிரம் கி.மீ. நீளப்பகுதியிலிருந்த 3 கோடிப்பேர் இதனைக் கண்டனர். இந்த எரிகோளங்களைக் காணமுடியாத பகுதிகளில்கூட பலர் இடிமுழக்கம் போன்ற ஒலியினைக் கேட்டதாகக் கூறினர்.

பொதுவாக எரிகல் பொழிவுகள் நிகழும் என்றாலும், அவை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பல திசைகளிலும் விழும். இவை வழக்கத்திற்கு மாறாக ஒரே திசையில், வரிசையாகச் சென்றன. இதற்கு 5 மணி நேரத்துக்குப்பின், மறுநாள் அதிகாலையில், அதாவது ஃபிப்ரவரி 9இன் பின்னிரவில் மீண்டும் இவ்வாறு நிகழ்ந்ததாகவும் சிலர் கூறினர்.

கனடாவைச் சேர்ந்த வானியலாளர் க்ளாரன்ஸ் சாண்ட் வெளியிட்ட விரிவான ஆய்வறிக்கையில், புவியைச் சுற்றும் (நிலவைப் போன்ற) இயற்கைத் துணைக்கோள் ஒன்று உருவாகி, அழிந்து வீழ்ந்திருக்கவேண்டும் என்று விளக்கினார்.

இக்கருத்தை மேலும் சில ஆய்வாளர்களும் பின்னர் உறுதிப்படுத்தினர். சுமார் ஒரு மீட்டர் அளவிலான விட்டத்துடன்கூட மிகச்சிறிய துணைக்கோள்கள் அவ்வப்போது உருவாகி புவியைச் சுற்றிவரும் என்றும், ஆனால் இவை தற்காலிகமானவை என்பதுடன் இவற்றைக் காண்பது எளிதல்ல என்றும் கூறப்படுகிறது.

வேறுபல விளக்கங்களுடன், சாண்ட் கருத்துக்கு மறுப்புக்களும் வந்தன. நிலவில் வெடித்த எரிமலையிலிருந்து வெளியேறியவை சிதறி புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent posts

மோன்டால்சினி

💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (சுவைய டுநஎi ஆழவெயடஉini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்....
Thamil Paarvai

விளாதிமிர் லெனின்

👉 ‘லெனின்” என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில்...
Thamil Paarvai

சரோஜினி நாயுடு இன்று இவரின் நினைவு தினம்.

இந்தியாவின் ‘கவிக்குயில்” என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதில்...
Thamil Paarvai

குன்னக்குடி வைத்தியநாதன்.

பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள். வயலின்...
Thamil Paarvai

எம்.கே.தியாகராஜ பாகவதர்.

🎼 தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார்....
Thamil Paarvai

ஏ.என்.சிவராமன்.

📰 பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார். 📰 இவர்...
Thamil Paarvai

இராஜேந்திர பிரசாத் இன்று இவரின் நினைவு தினம்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற...
Thamil Paarvai

தி. ஜானகிராமன்

நவீன இலக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமன் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவக்குடியில் பிறந்தார். இவர் கல்லூரியில் படித்தபோதே, விடுதலைப்...
Thamil Paarvai

தேசிய அறிவியல் தினம்

தியாகிகளை கொண்டாடுவதுபோல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு...
Thamil Paarvai

Leave a Comment