தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளரின் உத்தரவு: தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பாஸ்கரன், தீயணைப்புதுறை ஏ.டி.ஜி.பி.இயாக காந்திராஜன், மாநில மனித உரிமை டி.ஜி.பி.இயாக லட்சுமி பிரசாத், சென்னை ஊமனஞ்சேரி போலீஸ் பயிற்சி மைய டி.ஐ.ஜி.இயாக மகேந்திரகுமார் ரத்தோர், வேலுார் டி.ஐ.ஜி.இ யாக பாலகிருஷ்ணன், சென்னை கிழக்கு கமிஷனராக வனிதா உட்பட 10 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
டி.என்.பி.எல்., தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அபே குமார் கூடுதல் பொறுப்பாக கவனிக்க உள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.