கிரிக்கெட் விளையாட்டு

ஒவ்வொரு வீரர்களும் அவர்களது சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்: டி வில்லியர்ஸ்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் இதுகுறித்து கூறுகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தபின்னர், ஓட்டலுக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அடுத்தடுத்து சீட்டில் அமர்ந்திருந்தோம். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரை பார்த்தேன். அந்த சூழ்நிலையில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒருவருக்கொருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. நாங்கள் எதிர்பார்த்தது இது அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒன்றாக இணைந்தோம். மிகவும் கடினமான வகையில் வலைப்பயிற்சி எடுத்தோம். சிறப்பாகவே தயாரானோம். அணி சரியான பேலன்ஸ் கொண்டதாக உணர்ந்தோம். நாங்கள் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளோம். மூன்றிலும் தோல்வி. மற்றொரு மோசமாக சீசனாக அமைந்துவிடுமோ என்று எங்கள் அணி ரசிகர்கள் கருதுகிறார்கள். இன்னும் 11 லீக் ஆட்டங்கள் உள்ளன. ஐபிஎல் வரலாற்றின்படி 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அல்லது குறைந்த பட்சம் 7 போட்டிகளிலாவது வெற்றிபெற வேண்டும். ஆர்சிபி உடனடியாக வெற்றிக்கு திரும்ப வேண்டுமென்றாலே, ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். எங்களது உடனடியான வேலை, அணிகள் மீது நம்பிக்கை வைக்காமல் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு. ஆனால், பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளர் கடினமான நேரத்தில் எங்களுக்காக கடுமையான போராட வேண்டும். அவர்களுடைய சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.

Recent posts

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு...
Thamil Paarvai

Leave a Comment