கனடாவில், 1.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனேடிய புவிவேதியியலாளர்கள், கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள சுரங்கம் ஒன்றில் கண்டுபிடித்துள்ள இந்த தண்ணீர்தான் உலகிலேயே பழமையான தண்ணீர் என கருதப்படுகிறது.
![](https://paarvaionline.com/wp-content/uploads/2021/05/7c3c9ceb.jpg)
ரொரன்றோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் குழு ஒன்று இந்த அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளது. கனேடிய ஆய்வாளர்கள் இந்த தண்ணீரை ஆக்ஸ்போர்டு புவிவேதியியலாளர்களுக்கு அனுப்பி வைக்க, அவர்கள் அதை ஆராய்ந்து, அது 1.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீர் என கணக்கிட்டுள்ளார்கள்.
அத்துடன், அந்த தண்ணீரில் நுண்ணுயிரிகளும் உள்ளன. அந்த உயிரிகள் பொதுவாக கடல் படுகையில்தான் காணப்படும் நிலையில், முதன்முறையாக அவை நிலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூமிக்கடியில் 2.4 கிலோமீற்றர் ஆழத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், புவியில் பரிணாமம் தொடர்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பாக கொண்டாடப்படுகிறது.