இலங்கை உலகம் கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலத்தால் விவாதப்பொருளாக மாறிய விடயத்தால் இலங்கை அரச மட்டத்தில் அச்சம்.

கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவர் விஜய் தணிகாசலம்.

இவர் கடந்த வருடம் ஒன்ராறியோ சட்டசபையில் தமிழின ‘அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான சட்டமூலம் 104இனை கொண்டு வந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

மேற்படி சட்டமூலம் 104 ஆனது, முதலாவது விவாதத்தினை முடித்து இறுதி வாசிப்புக்காக ஒன்ராறியோ சட்டமன்ற மேற்சபையிடம் உள்ளது.

இச்சட்டமூலம் இறுதி வாசிப்பை முடித்து சட்டமாக நிறைவேற்றப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியுடன் கூடிய ஒருவார காலம் ‘தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரமாக’ அதிகாரபூர்வமாக ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படும்.

இதன்மூலம் ஒன்ராறியோவில் உள்ள அனைத்து இன மாணவர்களும் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பு பற்றி அறிந்துகொள்ளவும், அங்கிருந்து தப்பி கனடாவில் வாழும் தமிழர்களும் அவர்களின் தலைமுறையினரும் எதிர்கொண்ட உளவியல் ரீதியிலான தாக்கங்களை உணர்ந்து கொள்ளவும், அவற்றுக்குத் தீர்வினைக் காண்பதற்கும் ஏதுவாக அமையும் என்பது இச்சட்ட மூலத்தின் குறிக்கோள்.

இவ்விடயம்தான் தற்போது இலங்கை அரச மட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள நாடாளுமன்றத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இலங்கை அரசின் முன்னாள் வடமாகாண ஆளுநரும், தற்போது இலங்கை பொதுஜன பெரமுன (மகிந்த ராஜபக்சவின்) கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் மிகவும் காட்டமான உரையொன்றினை கடந்த செவ்வாயன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றியிருந்தார்.

அதில் அவர் கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலத்தையும் , ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றும்போது,

“மேற்படி சட்டமூலமானது நடைமுறைக்கு வருமானால், ஒன்ராறியோவில் உள்ள 4800இற்கும் அதிகமான பாடசாலைகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ‘தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ பாடமாகக் கற்பிக்கப்படும் என்பதுடன், இலங்கை அரசின் திட்டங்களுக்கும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

அத்துடன் எம்.பி.பி. விஜய் தணிகாசலம் அவர்கள் தனது சுய இலாபத்துக்காக அருவருக்கத்தக்க விதத்தில் இலங்கை விடயங்களைக் கையாள்கிறார்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் உடனடியாக இலங்கைக்கும் கனடாவுக்குமான ஒரு நாடாளுமன்ற குழுவினை அமைத்துப் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர்களின் இப்படியான செயற்பாடுகளைத் தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர் கோட்டாபய அரசாங்கம் பதவியேற்றவுடன் நியமன முறையில் எம்.பி.யாக பதவியேற்றதுடன், கடந்த ஆண்டு கனடாவுக்கு வருகை தந்து பல சந்திப்புகளை மேற்கொண்டதுடன், இங்குள்ள தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment