இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமரசம் ஏற்பட அமைதி காக்கும்படி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், குறித்த தாக்குதல் குறித்து பேசிய கனேடிய பிரதமர்இ
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் அப்பகுதியில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்.
தொடர்ந்து அவர், இந்திய பாகிஸ்தான் பகுதிகளில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தவும், தூதரக பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.
இந்த முயற்சியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நமது சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து பாடுபட தாங்களும் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து கனடா மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறது.
இரண்டு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் மேலும், ராணுவ தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கனடா வலியுறுத்துகிறது.
உலகமே கை கோர்த்து தீவிரவாதத்திற் கெதிராக போரிடுவதற்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதோடு, அதில் தன் நிலைப்பாட்டிலும் கனடா உறுதியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பிரச்சினை தொடர்பாக சுமூக தீர்வை எட்டுவதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
previous post
Recent posts
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.
கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.
“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி
கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்
அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...




