தன்னை விமர்சித்த ஒருவரை கைது செய்வதற்காக நடுவானில் விமானத்தை கடத்தியவர் பெலாரஸ் நாட்டின் அதிபர். அந்த வகையில் பெலாரஸ் நாட்டின் அதிபரான Alexander Lukashenko உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அவரது நாட்டின் மீது கனடா தடைகள் விதித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவும், பிரித்தானியாவும் பெலாரஸ் நாட்டின்மீது தடைகள் விதித்துள்ள நிலையில், கனடா நேற்று புதிதாக அந்நாட்டின்மீது தடைகள் விதித்துள்ளது. பெலாரஸ், அதிபரான Alexander Lukashenkoவின் ஆட்சியின் கீழ் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறி அந்நாட்டின் மீது கனடா தடைகளை விதித்துள்ளது.
குறிப்பாக, நிதி, பெட்ரோலியம் மற்றும் சில ரசாயனங்கள் தொடர்பில் தடைகள் இருக்கும் என கனடாவின் வெளியுறவு அமைச்சரான Marc Garneau தெரிவித்துள்ளார். இதுவரை, பெலாரஸ் நாட்டு அலுவலர்கள் 72 பேர் மீதும் ஐந்து நிறுவனங்கள் மீதும் கனடா தடைகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.