கனேடிய நகரமொன்றில் ருத்ரதாண்டவம் ஆடிச்சென்ற சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் பல கடந்த சில நாட்களாக இயற்கைச் சீற்றத்தை சந்தித்துவருகின்றன.
ஐரோப்பாவில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகள் பலத்த மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Barrie என்ற நகரை துவம்சம் செய்துள்ளது சூறாவளி.
சூறாவளியால் நான்கு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், 25 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அந்த நான்கு பேரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவிலான காயம் பட்ட மேலும் நான்கு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சேதமடைந்த 25 கட்டிடங்களில், மூன்று முற்றிலும் நாசமாகிவிட்டன.