Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கர்நாடகத்தில் முதன்முறையாக 2 குழந்தைகளுக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு!

14 வயது சிறுவன், 11 வயது சிறுமி என இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கறுப்புப் பூஞ்சை தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு கறுப்புப் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. 14 வயது சிறுவன், 11 வயது சிறுமி என இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கறுப்புப் பூஞ்சை தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும், பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கும் கறுப்புப் பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பண்ணையில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த இவர்களுக்கு கறுப்புப் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு குழந்தைகளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் கடுமையான சிறார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெளிவந்த அறிக்கையில், இருவரும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தங்கள் கண்களில், குறைந்தது ஒன்றை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் கறுப்புப் பூஞ்சை தொற்று அவர்களின் மூளை மற்றும் கண்களுக்கு பரவியுள்ளது என்று அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாரி நகரில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, போரிங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அவள் கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து துமகுருவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கறுப்புப் பூஞ்சை இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிதத்தை தொடர்ந்து சிறுவன் போரிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் குழந்தைகளுக்கு மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்படுவது இது முதல் முறை. இதுவரை கர்நாடகாவில் 1,250 மியூகோர்மைகோசிஸ் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 18 பேர் குணமடைந்த நிலையில்கூட 39 நோயாளிகள் பூஞ்சை நோயால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மொத்தம் 1,193 நோயாளிகள் தற்போது கர்நாடகாவில் மியூகோர்மைக்கோசிஸ் சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகர மாவட்டத்தில் மட்டும் 521 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கறுப்புப் பூஞ்சை நோயை தவிர்க்க, கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் முதல் வாரத்தில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மத்திய அரசிடமிருந்து பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை சுமார் 10,000 குப்பிகள் வரை கர்நாடகா பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதானந்த கவுடாவுடன் மியூகோர்மைகோசிஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளுக்காக எட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment