Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கர்நாடகத்தில் முதன்முறையாக 2 குழந்தைகளுக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு!

14 வயது சிறுவன், 11 வயது சிறுமி என இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கறுப்புப் பூஞ்சை தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு கறுப்புப் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. 14 வயது சிறுவன், 11 வயது சிறுமி என இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கறுப்புப் பூஞ்சை தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும், பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கும் கறுப்புப் பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பண்ணையில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த இவர்களுக்கு கறுப்புப் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு குழந்தைகளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் கடுமையான சிறார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெளிவந்த அறிக்கையில், இருவரும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தங்கள் கண்களில், குறைந்தது ஒன்றை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் கறுப்புப் பூஞ்சை தொற்று அவர்களின் மூளை மற்றும் கண்களுக்கு பரவியுள்ளது என்று அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாரி நகரில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, போரிங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அவள் கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து துமகுருவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கறுப்புப் பூஞ்சை இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிதத்தை தொடர்ந்து சிறுவன் போரிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் குழந்தைகளுக்கு மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்படுவது இது முதல் முறை. இதுவரை கர்நாடகாவில் 1,250 மியூகோர்மைகோசிஸ் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 18 பேர் குணமடைந்த நிலையில்கூட 39 நோயாளிகள் பூஞ்சை நோயால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மொத்தம் 1,193 நோயாளிகள் தற்போது கர்நாடகாவில் மியூகோர்மைக்கோசிஸ் சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகர மாவட்டத்தில் மட்டும் 521 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கறுப்புப் பூஞ்சை நோயை தவிர்க்க, கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் முதல் வாரத்தில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மத்திய அரசிடமிருந்து பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை சுமார் 10,000 குப்பிகள் வரை கர்நாடகா பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதானந்த கவுடாவுடன் மியூகோர்மைகோசிஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளுக்காக எட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment