Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசியரீதியில் முதலிடத்தைப் பிடித்த யாழ்.மாணவனை வேதனைப்படுத்தும் பதிவு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் 30 வருடத்திற்குப் பின்னர் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவன் தேசியரீதியில் முதலிடத்தைப் பிடித்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அந்த மாணவனது புகைப்படத்துடன் விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளது புகைப்படங்களை இணைத்து சிலர் பதிவிட்டிருப்பதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கண்டித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, இதுபோன்ற செயற்பாடுகள் மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

கணிதப்பிரிவில் முதலிடத்தைப் பெற்ற தனராஜ் என்பவரது புகைப்படத்துடன் இன்று விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைத்தளங்களில் படங்கள் பதிவேற்றப்பட்டதைக் கண்டேன்.

30 வருடப் போரின் பின்னர் கணித பாடத்தில் யாழ்ப்பாணத்தில் முதலிடத்தை மாணவர் ஒருவர் பெற்றிருக்கின்றார்.

அப்படியான சூழல் உருவாகியிருக்கின்றது. அன்று அரச தலைவராக இருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போதைய அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் அப்படியான நிலைமைகள் ஏற்படும் வகையிலான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

அதன் காரணமாகவே இதுபோன்ற திறமைசாலிகள் இன்று முன்னிலை வகிக்கின்றனர்’எனத் தெரிவித்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் மாணவர் தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இப் பதிவு மாணவனிற்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment