காதல் கணவனை 4 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தான், பிரித்தானியாவில் நாங்கள் இதுவரை சந்தித்ததில் மோசமான ஒரு வழக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பிபிசி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அதில், இங்கிலாந்தை சேர்ந்த பொலிஸார் தான் சந்தித்த மிகவும் மோசமான ஒரு வழக்கு குறித்து பேசியிருந்தார்.
அலெக்ஸ் ஸ்கீல் என்கிற 22 வயது இளைஞர் தன்னை விட வயதில் மூத்த பெண்ணான ஜோர்டான் வொர்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே, தினமும் வீட்டிலிருந்து கதறும் சத்தம் கேட்டுள்ளது. பல நாட்களாகவே இதனை கேட்டு வந்த பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வீட்டின் கதவை தட்டியதும் வேகமாக வந்து திறந்த ஜோர்டான் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய கணவர் தன்னை தானே தாக்கிக்கொள்கிறார் என கூறியிருக்கிறார்.
உடனே மேல் தளத்திற்கு சென்ற பொலிஸார் வீடு முழுவதும் ரத்தக்கறை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அங்கு உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அலெக்ஸ் ஸ்கீலை மீட்டு வேகமாக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இந்த காயங்கள் அனைத்தும் வேறு ஒருவர் தாக்கியிருப்பதை போலவே இருக்கிறது என பொலிசாரிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் அலெக்ஸ் ஸ்கீலிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், உங்கள் மனைவியால் ஏதேனும் தாக்குதல் நடத்தப்படுகிறதா என கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து, இல்லை நான் தான் என்னை தாக்கிக்கொள்கிறேன். அதற்கான காரணம் தெரியவில்லை என கூறியிருக்கிறார்.
அவரது வார்த்தை மீது நம்பிக்கை வராத பொலிஸார், அன்று முதல் நோட்டமிட ஆரம்பித்துள்ளனர். சில நாட்கள் கழித்து மீண்டும், பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு போன் செய்துள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்த பொலிஸார், அலெக்ஸை கண்டதும் பதறியுள்ளனர்.
காரணம் என்னவென்றால், கதவை திறந்த அலெக்ஸ் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் நின்றுகொண்டிருந்துள்ளார். எந்த சிகிச்சையும் பெறாமல் அவை அனைத்தும் நாள்பட்ட காயங்களாக மாறியிருந்தது. அந்த சமயம் மீண்டும்இ உங்கள் மனைவி கொடுமைப்படுத்துகிறாரா? என பொலிஸார் கேட்டுள்ளார்.
அப்பொழுதும் மனைவியை காட்டிக்கொடுக்க அலெக்ஸ் மறுப்பு தெரிவித்து மிகவும் கூலாக மருத்துவமனை செல்லலாம் என கூறியுள்ளார்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்இ இன்னும் 10 நாட்கள் தாமதித்திருந்தால் கூட உயிர் பிழைத்திருப்பது கடினம் என கூறியுள்ளார்.
அதன்பிறகே வாய் திறந்த அலெக்ஸ், என்னுடைய மனைவியுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம், தலை சீவும் பொருளை கொண்டு தாக்குவார். முதல் 3 வருடங்கள் மன ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளானேன். ஆனால் அதன்பிறகு உடல் ரீதியிலான தாக்குதல்களை அனுபவித்தேன்.
இரவு முழுவதும் தூங்கவிடாமல் சுடுதண்ணீரை மேலே ஊற்றி கொடுமை செய்வார். அது குளிர்ந்து விட்டால்இ மீண்டும் சூடு செய்வார். ஒரு சில நேரங்களில் கத்தியை கொண்டு என்னை குத்துவார். நான் பயந்து போய் மேல் தளம் அல்லது கழிவறைக்கு சென்றுவிடுவேன். உணவு சரியாக கொடுக்க மாட்டார்.
அவர் கூறும் ஆடையை தான் நான் உடுத்த வேண்டும். இதனால் என்னுடைய எடை அதிகமாக குறைந்துவிட்டது. அவர் எதுவும் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் யாரிடமும் கூறவில்லை என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் ஜோர்டான் வொர்த்தை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி 7 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பிரித்தானியாவில் ஒருவரை கட்டுப்படுத்தி கொடுமைப்படுத்தியதற்காக தண்டனை பெறும் முதல் பெண் இவர் தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
next post
Recent posts
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்
பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
புதிய பாதையை நோக்கிய கனடா
கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்
தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...




