பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரங்கல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது போன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமேரிக்கா துணை நிற்கும் என கென் ஜஸ்டர் உறுதியளித்தார். சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிஆர்பிஎப் வீரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மாஒளி கண்டனம் தெரிவித்துள்ளார். வீரர்கள் உயிழப்புக்கு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நாடே துணை நிற்கும் என்று அமித்ஷா தெரிவித்துளளார்.இதனை தொடர்ந்து ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமா பகுதிக்கு என்ஐஏ குழு நாளை செல்கிறது. இந்நிலையில் புல்வாமா பகுதிக்கு என்ஐஏ குழு நாளை செல்கிறது.ஐ.ஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் 12 பேர் கொண்ட தேசிய விசாரணை முகாமை விசாரிக்க உள்ளது.