உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கொரோனாவால் கடும் நஷ்டம்- அமெரிக்காவில் மேலும் 10,000 ஓட்டல்கள் மூடப்படுகின்றன

கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், ஓட்டல்களுக்கு வாடிக்கையாளர்கள் வருகை அடியோடு குறைந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஏராளமான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களை குத்தகைக்கு கொடுக்கவும், விற்பனை செய்யவும் பலர் விளம்பரம் செய்துள்ளனர். 
இந்நிலையில் ஓட்டல்களின் நிலை குறித்து தேசிய உணவக சங்கம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவை வெளியிட்டு, அரசுக்கு தனது கோரிக்கையையும் வைத்துள்ளது.

இதுபற்றி தேசிய உணவக சங்கம் கூறியதாவது:-

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, இந்த ஆண்டு நாட்டில் உள்ள 110000 ஓட்டல்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. வரும் மூன்று வாரங்களில் மேலும் 10000 ஓட்டல்கள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
எனவே, தொற்றுநோயால் கடும் பொருளாதார சிக்கலில் உள்ள ஓட்டல் தொழில்துறைக்கு உதவ அரசு புதிய நிதித்தொகுப்பை வெளியிட வேண்டும். நிவாரணத்திற்காக இனியும் காத்திருக்க முடியாது. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6,000 உணவக ஆபரேட்டர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், 87 சதவீத முழு சேவை உணவகங்களில் சராசரியாக 36% வருவாய் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து தொழிலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால்,  83 சதவீத உணவகங்கள் அடுத்த மூன்று மாதங்களில் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment