Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கொழும்புக்குள் வந்த 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள்-மூன்று மணித்தியாலத்தில்

மூன்று மணித்தியாலத்தில் கொழும்புக்குள் 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பகுதியிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய 147 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குளியாபிட்டி பகுதியில் 100 பேரும், கண்டி பகுதியில் 85 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 21775 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் 3,969 வாகனங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் பயணித்த 4,191 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக பயணிக்க முற்பட்ட 154 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் பயணித்த 275 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்புக்கமைய நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களே அதிகளவில் வந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 16 ஆயிரத்து 571 வாகனங்கள் இவ்வாறு வருகைத்தந்துள்ளன. இதன்போது ஹைலெவல் வீதி மற்றும் கண்டி வீதி ஊடாகவே கொழும்புக்குள் பெருந்தொகையான வாகனங்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் , 8,412 வாகனங்களில் சுகாதார பிரிவினரும், 9498 வாகனங்களில் அரச உத்தியோகத்தர்களும் வருகை தந்துள்ளதுடன், 3968 வாகனங்களில் நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதற்கமைய 3 மணிநேரத்திற்குள் 62235 வாகனங்கள் கொழும்புக்குள் வருகை தந்துள்ளன.

கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்களை கணக்கீடு செய்வது மட்டுமன்றி, அந்த வாகனங்களில் வருகை தருபவர்கள் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனரா?, அவர்கள் அத்தியாவசிய சேவை பணியாளர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றிவளைப்புக்காக ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , இதன்போது பொலிஸார் எரிய பின்தொடர்ந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்போது தொழிலுக்கு செல்பவர்கள் தங்களது நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை பொலிஸாருக்கு காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment