புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். கடந்த 2014-ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், மனோகர் பாரிக்கர் அப்பதவியை துறந்துவிட்டு தனது சொந்த மாநிலமான கோவாவுக்கு முதலமைச்சர் ஆனார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், மும்பை, டெல்லி நகரங்களில் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டார். தற்போதும் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், மனோகர் பாரிக்கர் காலமானார் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் கோவா நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, கோவா முன்னாள் துணை முதல்வரும், வடக்கு கோவா மபுசா தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ.வுமான பிரான்சிஸ் டிசோசா நேற்று முன்தினம் இறந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையில் பா.ஜ.வின் பலம் 13 ஆக குறைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு, கோவா எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ பிரான்சிஸ் டிசோசா சோகமான மரணத்தால், சட்டப்பேரவையில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.வி.ன் பலம் குறைந்துவிட்டது. அந்த கட்சி நீண்ட காலமாகவே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. பா.ஜ.வின் பலம் மேலும் குறையலாம் என்பதால், சிறுபான்மை அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதிக்கக் கூடாது. அதனால் பா.ஜ அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, பெரும்பான்மை உள்ள காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அதை விடுத்து இங்கு ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது சட்டவிரோதமாக இருக்கும். அதை எதிர்த்து வழக்கு தொடர்வோம். இவ்வாறு சந்திரகாந்த காவ்லேகர் கூறியுள்ளார். கடிதம் கோவா ஆளுநருக்கு நேற்று அனுப்பப்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர தங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Recent posts
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்
பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
புதிய பாதையை நோக்கிய கனடா
கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்
தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...




