புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். கடந்த 2014-ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், மனோகர் பாரிக்கர் அப்பதவியை துறந்துவிட்டு தனது சொந்த மாநிலமான கோவாவுக்கு முதலமைச்சர் ஆனார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், மும்பை, டெல்லி நகரங்களில் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டார். தற்போதும் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், மனோகர் பாரிக்கர் காலமானார் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் கோவா நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, கோவா முன்னாள் துணை முதல்வரும், வடக்கு கோவா மபுசா தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ.வுமான பிரான்சிஸ் டிசோசா நேற்று முன்தினம் இறந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையில் பா.ஜ.வின் பலம் 13 ஆக குறைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு, கோவா எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ பிரான்சிஸ் டிசோசா சோகமான மரணத்தால், சட்டப்பேரவையில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.வி.ன் பலம் குறைந்துவிட்டது. அந்த கட்சி நீண்ட காலமாகவே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. பா.ஜ.வின் பலம் மேலும் குறையலாம் என்பதால், சிறுபான்மை அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதிக்கக் கூடாது. அதனால் பா.ஜ அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, பெரும்பான்மை உள்ள காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அதை விடுத்து இங்கு ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது சட்டவிரோதமாக இருக்கும். அதை எதிர்த்து வழக்கு தொடர்வோம். இவ்வாறு சந்திரகாந்த காவ்லேகர் கூறியுள்ளார். கடிதம் கோவா ஆளுநருக்கு நேற்று அனுப்பப்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர தங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...