நாட்டில் இன்று கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 891 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களுடன் இலங்கையில் மொத்தமான ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 677 கோவிட் தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள், திவுலப்பிட்டிய, பேலியகொடை, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொத்தணிகளை சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார ஊக்குவிப்பு பணியகம் கூறியுள்ளது.
இதனை தவிர கோவிட் தொற்றுக்கு உள்ளான ஆயிரத்து 828 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவர்களுடன் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 360 எனவும் அந்த பணியகம் கூறியுள்ளது.