இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சடலத்தை 25 வருடங்களாக பாதுகாத்து யாழ் கொண்டுவரப்பட்ட உடல்…..

இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாலை அவரது விருப்பத்திற்கமைய அவரது சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த எம் ஸ்ரிபன் ஜோகி என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்துள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் அவர் இறந்துள்ளார்.

அவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது சடலத்தை தனது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு கொண்டுச்சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

அக்கால பகுதியில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்திருந்தமையால் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல் நிலவியுள்ளது. இதனையடுத்து அவரது சடலத்தை 25 வருடங்களுக்கு பாதுகாக்க நிறுவனம் ஒன்றிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சடலத்தை இலங்கை கொண்டுவர உறவினர்கள் முயற்சித்த போதும் 25 வருட கால ஒப்பந்தம் உள்ளமையால்இ மீள பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது 25 வருடங்கள் நிறைவடைந்தமையினால் அவரது சடலத்தை பெற்ற உறவினர்கள்இ அதனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Recent posts

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

Leave a Comment