அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் எல்லையைக் கடந்து வந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் பனிப் படர்ந்த பிரதேசத்தில் சிக்கியிருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அண்மையில், அங்கு நிலவிய பனிப் பொழிவால் அந்த பகுதியே பனியால் மூடப்பட்டு, வெப்பநிலை 20 டிகிரிக்கும் கீழே சென்றிருந்து.
எந்த தருணத்திலும் பிரசவம் ஆகலாம் என்ற நிலையில், இருந்த குறித்த 25 வயது மதிக்கத்தக்க பெண், அவசர உதவி சேவைக்கு அழைத்துள்ளார்.
தகவலறிந்த தீயணைப்பு பிரிவினர் மனிடோபா பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
கடும் குளிரில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருந்த அந்த பெண்ணை மீட்ட தீயணைப்பு படையினர், நோயாளர் காவு வாகனம் வரும் வரை போர்வைகளால் மூடி வைத்திருந்தனர்.
விசாரணையில், அவர் மின்ன சோட்டாவிலிருந்து ரயில் பாதை வழியாக நடந்தே, எல்லையைக் கடந்து கனடாவுக்குள் வந்துள்ளதாக இருந்து தெரியவந்துள்ளது.
அவருக்கு இன்னும் குழந்தை பிறக்காத நிலையில், கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்பதுடன் சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்ததையடுத்து கைது செய்யப்பட்டு கனடா எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
previous post
next post
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...