கனடாவின் சட்பெரி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
3.5 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 27 கிலோ மீற்றர் கடல் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், இதன் அதிர்வுகள் சட்பெரியின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இதேவேளை, கனடாவின் சட்பெரி மாகாணத்தில் கடந்த புதன்கிழமையும் 2.9 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தது.
கனடாவின் சட்பெரி மாகாணத்தில் ஒரே வாரத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டமையானது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.