இந்தியாவின் ‘கவிக்குயில்” என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம். இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத்தின் மன்னராக இருந்த நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார்.
இவர் எழுதிய The Golden Threshold, The Bird of Time, The Broken Wing ஆகிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.
இவர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியை முன்னெடுத்தார். 1919ஆம் ஆண்டு ஹோம் ரூல் இயக்கத் தூதராக நியமிக்கப்பட்டார். காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தில், பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து முதலில் களம் இறங்கினார்.
1925ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்த முதல் பெண் இவர் தான். காந்திஜி இவரை செல்லமாக ‘மிக்கி மவுஸ்” என்பார். காந்தியடிகளுடன் தண்டி யாத்திரையில் கலந்துகொண்டார்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.
பெண்களுக்கு பெருமையை சேர்த்த சரோஜினி நாயுடு 1949ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி மறைந்தார்.