பிரேமம் மலையாள படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதையடுத்து பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி என தெலுங்கு படங்களில் நடித்தவர், தியா, மாரி-2 என தமிழில் நடித்துள்ளார். தற்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும், பகத்பாசிலுடன் அதிரன் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், முதன்முதலாக ஒரு கன்னட படத்தில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி. கன்னட நடிகை ரக்ஷிதாவின் கணவர் பிரேம் இந்த படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி லீடு ரோலில் நடிக்கும் இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது.