
ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்ப கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், உதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒன்ராறியோவின் கோரிக்கைக்கு ஒட்டாவா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இராணுவம் மாகாணத்தில் உதவுவதுடன் தளவாட மற்றும் நிர்வாக ஆதரவையும் வழங்கும் எனவும் கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் (Bill Blair) டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், கனேடிய செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுகாதார கனடாவும் மருத்துவ பணியாளர்களை வழங்கும் எனவும் ,கனேடியர்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நாங்கள் ஒன்ராறியோவுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் பிளேர் (Bill Blair) பதிவிட்டுள்ளார்.