உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

டாமினிக் என்று பெயர் சூட்டியதால், லட்சக்கணக்கில் பரிசு வென்ற பெற்றோர்.

நாம ஒன்னு ரெண்டு தடவ அதிர்ஷ்டம் அடிச்சு பார்த்து இருப்போம். ஆனால் 60 ஆண்டுகளுக்கும் அதிர்ஷ்டம் அடிச்சு பார்த்து இருக்கீங்களா. அப்படித்தான் இங்க ஒரு தம்பதியினர் அப்படியொரு அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். பிறக்கும் போதே இவர்களின் குழந்தை இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

ஆமாங்க ஆஸ்திரேலியாவில் உள்ள டோமினோஸ் நிறுவனம் அவர்களின் 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நோக்கத்தில் ஒரு போட்டியை அறிவித்து இருந்தது. அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி பிறக்கும் குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தால் டொமினிக் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் டொமினிக்யூ எனப் பெயரிட்டால் அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா கிடைக்கும் அளவிற்கான பணத்தைப் பரிசாக வழங்குவதாக அவர்கள் அறிவித்திருந்தன.

இதன்படி சிட்னியைச் சேர்ந்த தம்பதியினரான சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் என்ற தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை அன்றைய நாளில் ஈன்றெடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர்.

கடைசி நேரத்தில் வந்த அதிர்ஷ்டத்தை பாருங்க

முதலில் இந்த தம்பதியினருக்கு இப்படி ஒரு போட்டி நடப்பதே தெரியாதாம். இந்த போட்டிக்காக விண்ணப்ப்பித்தவர்களில் ஒருவருக்கே இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது சிலிமென்டைன் பிரசவ வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் சுமார் 72 மணி நேரம் பிரசவ வலியில் போராடியுள்ளார். அதன் பிறகு இந்த வருடம் டிசம்பர் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று சரியாக அதிகாலை 1.47 மணிக்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து அந்த தம்பதியினர் கூறியதாவது குழந்தை பிறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் என் அம்மா டோமினோஸ் போட்டி விளம்பரத்தை எங்களுக்கு தெரியப்படுத்தினார். நானும் என் கணவரும் அதைக் கண்டு சிரித்தோம். ஏனெனில் எங்க குழந்தை செவ்வாய் அன்றே பிறந்து விடுவான் என்று நினைத்தோம். ஆனால் அவன் சரியாக அதிகாலை 1.47 மணிக்கு தான் பிறந்தான். உண்மையில் எங்களுக்கு எதிர்பாராத விதமாகத்தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது என சிலிமென்டைன் கூறியுள்ளார்.

எனவே உடனே அந்த போட்டியில் பங்கு கொள்ள அவர்கள் தங்கள் மகனுக்கு டோமினிக் என்ற பெயரையும் சூட்டி பிறப்புச் சான்றிதழ் உடன் விண்ணப்பித்து உள்ளனர். அப்படியே பரிசுத் தொகையையும் தட்டிச் சென்று உள்ளனர்.

பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா ?

அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா வழங்குவதற்கான பணத்தை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பீட்சாவின் விலை 14 டாலர் ஆகும். எனவே மொத்தமாக சேர்த்து 60 வருடத்திற்கு கிட்டத்தட்ட 10,080 ஆஸ்திரேலியா டாலரை டோமினோஸ் நிறுவனம் அந்த தம்பதியினருக்கு வழங்கியுள்ளது. நம்முடைய இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட 5.63 லட்சம் ரூபாய் ஆகும். பிறக்கும் போதே அவர்களுடைய மகன் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக அந்த தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெற்றி கொண்டாட்டம்

இது குறித்து டோமினோஸ் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. 60 ஆண்டு காலமாக நாங்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் 60 ஆவது ஆண்டு விழாவை இப்படியொரு வித்தியாசமான போட்டியுடன் கொண்டாடியது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

இந்த நன்னாளில் டோமினிக் பிறந்ததும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்த பரிசுத் தொகையுடன் சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். பீட்சா உலகில் எங்கள் சேவை இன்னும் தொடரும் என டோமினோஸ் நிறுவனம் பறைசாற்றியுள்ளது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment