கிரிக்கெட் விளையாட்டு

டோனியைப் போல ஆட்டத்தை மாற்ற நினைத்த தினேஷ் கார்த்திக்கின் செயல்.. கோபமடைந்த ரசிகர்கள்!

ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் கடைசி ஓவரில், டோனியைப் போல தினேஷ் கார்த்திக் ஆட முயன்றது ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்தது. இந்திய அணி 213 ஓட்டங்கள் இலக்கை இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

நம்பிக்கை நட்சத்திரம் டோனி 2 ஓட்டங்களிலேயே அவுட் ஆன நிலையில், தினேஷ் கார்த்திக் மற்றும் குர்ணால் பாண்ட்யா இருவரும் வெற்றிக்காக போராடினர். இருவருமே அதிரடியாக ஆடினர்.கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அப்போது தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்தில் 2 ஓட்டங்களை அவர் எடுத்த நிலையில், இரண்டாவது பந்து மெய்டன் ஆனது. பின் 3வது பந்தை ஸ்ட்ரெய்ட் திசையில் அடித்தார். ஒரு ரன் எடுக்க வேண்டிய சூழலில் தினேஷ் கார்த்திக் ரன்னுக்காக ஓடாமல் நின்றார்.

மேலும் எதிர்முனையில் இருந்து ஓடி வந்த குர்ணால் பாண்ட்யாவிடம் ஒரு ரன் வேண்டாம் என்று கூறி நிறுத்தி விட்டார். இதற்கு காரணம், தினேஷ் கார்த்திக் நிதாஹஸ் கோப்பை இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அதேபோல் இந்தப் போட்டியிலும் ஆட நினைத்தார்.

ஆனால், சௌதியின் அபார பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்-ஆல் சிக்சர், பவுண்டரி எதுவும் விளாச முடியவில்லை. இதனால் அவரால் அடுத்தடுத்த பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் குர்ணால் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் 11 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்தார்.

இதன்மூலம் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. வழக்கமாக இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், டோனி எதிர்முனையில் இருக்கும் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தானே அணியை வெற்றி பெற வைப்பார். அதே பாணியை பின்பற்ற நினைத்த தினேஷ் கார்த்திக் வெற்றியை தவறவிட்டார்.

இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், வெறுப்பையும் அளித்தது. இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் 16 பந்துகளில் 33 ஓட்டங்களும், குர்ணால் 13 பந்துகளில் 26 ஓட்டங்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

Leave a Comment