நடுவழியில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டதில், உகாண்டா நாட்டு அமைச்சரின் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி(Yoweri Museveni) தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தொழில் மற்றும் போக்குவரத்து துறை இருந்து வருபவர் கட்டும்பா வாமலா(Katumba Wamala). இவர் ஒரு முன்னாள் ராணுவ தளபதி ஆவார். 64 வயதாகும் இவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நோக்கில், ராணுவ பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
இந்நிலையில், அமைச்சர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தன்னுடைய மகள் நாந்தோங்கோவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். . நாந்தோங்கோ அப்பாவுடன் சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டே வந்தபோது திடீரென அவர்கள் கார் மீது சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர் . துப்பாக்கி குண்டுகள் அப்பா, மகளுடன் சேர்த்து டிரைவர் மீதும் பாய்ந்ததில் மகளும், டிரைவரும் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே இறந்துவிட்டனர்.
அமைச்சர் கட்டும்பா வாமலா உடம்பெல்லாம் காயங்களுடன் உயிர் தப்பி தப்பி நிலையில் , அங்கிருந்தோர் விரைந்து வந்து அவரை மீட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. அமைச்சருக்கு குறி வைத்து இந்த கொலைகள் நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை என கூறப்படும் நிலையில், அமைச்சரை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டமை அந்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.