Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தந்தைக்கு வைத்த குறியில் பரிதாபமாக பலியான மகள்

நடுவழியில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டதில், உகாண்டா நாட்டு அமைச்சரின் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி(Yoweri Museveni) தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தொழில் மற்றும் போக்குவரத்து துறை இருந்து வருபவர் கட்டும்பா வாமலா(Katumba Wamala). இவர் ஒரு முன்னாள் ராணுவ தளபதி ஆவார். 64 வயதாகும் இவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நோக்கில், ராணுவ பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

இந்நிலையில், அமைச்சர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தன்னுடைய மகள் நாந்தோங்கோவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். . நாந்தோங்கோ அப்பாவுடன் சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டே வந்தபோது திடீரென அவர்கள் கார் மீது சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர் . துப்பாக்கி குண்டுகள் அப்பா, மகளுடன் சேர்த்து டிரைவர் மீதும் பாய்ந்ததில் மகளும், டிரைவரும் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே இறந்துவிட்டனர்.

அமைச்சர் கட்டும்பா வாமலா உடம்பெல்லாம் காயங்களுடன் உயிர் தப்பி தப்பி நிலையில் , அங்கிருந்தோர் விரைந்து வந்து அவரை மீட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. அமைச்சருக்கு குறி வைத்து இந்த கொலைகள் நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை என கூறப்படும் நிலையில், அமைச்சரை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டமை அந்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

Leave a Comment