![](https://paarvaionline.com/wp-content/uploads/2021/02/25-1424864464-jaishankar34-600.jpg)
ஐக்கிய இலங்கைக்குள் நீதி, சமாதானம் மற்றும் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தலைவர்களை கடந்த மாதம் சந்தித்தவேளை நல்லிணக்க முயற்சிகளிற்கான இந்தியாவின் ஆதரவை வெளியிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எழுப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் சமூகம் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் அபிலாஷைகளுக்கு இடமளிக்கும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முயற்சிகளில் இந்தியா அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.
ஐக்கிய இலங்கைக்குள் நீதி சமாதானம் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம். அரசியலமைப்பின் 13வது திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளிற்கும் இது பொருந்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.