Featured Uncategorized உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், LGBTQ சமூகத்திற்கான திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறும். இந்த மசோதாவிற்கு, நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஆதரவாக 399 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பதிவாயின.

இருப்பினும், சட்ட அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், அரசு கெசட்டில் வெளியிடுவதற்கும் முன்பு செனட்டின் ஒப்புதலை பெற வேண்டும். பாராளுமன்ற அமர்வின் போது, ஒரு பிரதிநிதி, LGBTQ உரிமைகளுக்கான ஆதரவைக் குறிக்கும் வகையில், ஒரு பெரிய வானவில் வண்ண கொடியை அறைக்குள் ஏந்திச் சென்றார்.

ஆசியாவில், தைவான் மற்றும் நேபாளம் மட்டுமே தன்பாலின திருமணத்தை முறையாக அங்கீகரித்துள்ளன. அதே நேரத்தில் இந்தியாவில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில்  உச்ச நீதிமன்றம் தன்பாலின திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது  என்றும். இது தொடர்பான முடிவை நாடாளுமன்றம் தான் எடுக்க வேண்டும் எனக் கூறியது.

சர்வதேச LGBTQ சமூகத்தின் வரவேற்கத்தக்க இடமாக தாய்லாந்து புகழ் பெற்றிருந்தாலும், உள்ளூர் சமூக ஆர்வலர்கள் நீண்டகாலமாக வேரூன்றிய பழமைவாத உணர்வுகளுடன் போராடி வருகின்றனர். முன்மொழியப்பட்ட சட்டம் பாலின-நடுநிலை விதிமுறைகளை பின்பற்றும் திருமண சட்டத்திற்குள் மாற்றம் செய்வதை குறிப்பிட்டுள்ளது. சட்டத்தில் உள்ள “ஆண்கள்,” “பெண்கள்,” “கணவன்கள்,” மற்றும் “மனைவிகள்” போன்ற பாலின சார்ந்த வார்த்தைகள் தொடர்பான குறிப்புகளை நீக்குமாறும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த மசோதா LGBTQ தம்பதிகளுக்கு பரம்பரை மற்றும் தத்தெடுப்பு உரிமைகளை வழங்குகிறது.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் LGBTQ அமைப்பினர் தங்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடாக உள்ளது நெதர்லாந்து. அந்நாட்டில் 2001ம் ஆண்டு தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாடாக 2003 ஆம் ஆண்டில் பெல்ஜியம் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

2003ம் ஆண்டு முதல் தன்பாலின திருமணத்திற்கு கனடா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும்,  2006ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலும், 2009ம் ஆண்டில் நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளிலும், 2010ம் ஆண்டில் போர்ச்சுகல், ஐஸ்லாந்து, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிகும் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.

2012 ஆம் ஆண்டில் டென்மார்க்கிலும், 2013 ஆம் ஆண்டில் பிரேசில், பிரான்ஸ், உருகுவே, நியூஸிலாந்து ஆலிய நாடுகளிலும், 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலும் தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டது.

அமெரிக்கா அயர்லாந்து ஆகிய நாடுகளில் 2015ம் ஆண்டிலும், 2016 ஆம் ஆண்டில் கிரீன்லாந்து, கொலம்பியா, ஆகிய நாடுகளிலும், 2017ஆம் ஆண்டில் பின்லாந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மால்டா ஆகிய நாடுகளில் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

2019ம் ஆண்டில் ஆஸ்திரியா, ஈகுவடார், தைவான் ஆகிய நாடுகளிலும், 2020ம் ஆண்டில் கோஸ்டாரிகாவிலும், 2022 ஆம் ஆண்டில் சிலி,  கியூபா, ஸ்விட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளிலும் 2023ம் ஆண்டில் அன்டோர்ரா நாட்டிலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Recent posts

0x1c8c5b6a

0x1c8c5b6a
admin

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

Leave a Comment